Saturday, December 5, 2009

செல்போன் விளைவிக்கும் மனிதப்படுகொலைகள்

.


ஒவ்வொரு
அறிவியல் கண்டுபிடிப்பும்
மக்களின் நல்வாழ்விற்கே .
ஆயினும் ,
அதனை பயன்படுத்தும்
மனிதனின் செயல்பாடுகளால்
மனித சமுதாயத்திற்கே
அது
மிகப்பெரிய ஆபத்தாக
முடிவதுடன்
பல
மனிதப்படுகொலைகளையும்
நிகழ்த்தி விடுகின்றது .


இன்றைக்கு
நம்மிடம்
எது இருக்கின்றதோ ,இல்லையோ ,
ஆனால் ,
செல்போன் ஒன்று இருக்கின்றது .
செல்போன்
மிக நல்ல
பயனுள்ள
கண்டுபிடிப்பு தான்,
ஆனால் ,
அதனை
நாம்
வாகன ஓட்டியாக இருந்து
பயன்படுத்தும் பொழுது
ஏற்படும்
பேராபத்தை
வேதாரண்ய வேதனைகள்
உணர்த்தியுள்ளது .


சம்பவம் பற்றி
நேரில் பார்த்த
ஒரு குழந்தை
கூறிய விதத்திலிருந்து
செல்போன் விளைவித்தது
மனிதப்படுகொலையே
என்பது உறுதியாகிறது .

இப்படிப்பட்ட மனிதப்படுகொலைகள்
இனியும் நடக்கக்கூடாது ,
இதனை
நாம்
கட்டாயம்
தடுக்க வேண்டும்.

இல்லாதுபோனால்
நாம்
மனிதர்களே அல்லர் .

அதனால் ,

அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்


முதலாவதாக

இந்த தவற்றை நாம் செய்யவேகூடாது .
இதில் நாம் உறுதியாக இருக்கவேண்டும்.


இரண்டாவதாக
அரசிடம் ,
நாம் ,

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டி ,
அதன் விளைவாக
பிறருக்கு மரணம் விளைவித்தால் ,
மரணம் விளைவிக்கின்ற எவரொருவருக்கும்
10 ஆண்டுகள் வரை
சிறை காவல் தண்டனையும் விதிக்கவேண்டும் என்றும் ,
அவரின் உரிமத்தை
உடனே ரத்து செயவததுடன் ,
செல்போன் உபயோகிக்க தடையும் ,
வாகனங்கள்
மற்றும்
சிம்கார்டுகள் வாங்க
தடையும்விதிக்குப்படும் என்றும் ,

இது தவிர்த்து ,
சாதாரணமாக செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால்
(மரணம் விளைவிக்காமல்)
வாகனங்களை இயக்குபவருக்கு ,
அவரின் உரிமத்தை
உடனே ரத்து செய்தும் ,
மேலும்
3 ஆண்டுகள்
செல்போன் உபயோகிக்க தடையும் ,
வாகனங்கள்
மற்றும்
சிம்கார்டுகள்
வாங்க தடையும்
விதிக்குப்படும்
எனவும்
சட்டம் இயற்ற வேண்டும்
என
கோரிக்கைகளை
வைக்கவேண்டும் ,

மேலும்,
தனதுயிரை
கொடுத்து
பச்சிளம்
குழந்தைகளின்
இன்னுயிர்
காக்க
போராடி
தன்னுயிரை
பொறுட்படுத்தாது
மாய்ந்த
மாதரசி ,
கண்ணகிக்கு நிகரான
தியாக செம்மல்
மாதரசி
சுகந்தி
அவர்களின்
பெயரில்
இனி
வரும் காலங்களில்
நல்லாசிரியர் விருதை
வழங்கவேண்டும்
என்றும் ,
அவருக்கு
உரிய
அரசு மரியாதை
செலுத்த வேண்டும்
என்றும்

வேண்டுகோள் விடுக்கவேண்டும் .

மேலும் ,
கல்வி நிறுவனங்களில்
இயங்கும் வாகனங்கள்
சாதாரணமாக
40 KM/hr வேகத்திற்கு மேல்
செல்ல தடைவிதிக்கவேண்டும்,
என்றும்

25 KM/hr வேகத்திற்கு மேல்
நகர் பகுதிக்குள்
செல்ல தடைவிதிக்கவேண்டும்,
என்றும் ,

கோரிக்கைகளை வைக்கவேண்டும் .

இதன் முலம் ,
நாம்
இறந்த
அந்த
பச்சிளம் குழந்தைகளின்
இறப்பிற்கும் ,
தன்னுயிரை
நீத்த
தாரகையின்
இறப்பிற்கும்
பிரயச்சித்தம்
தேடியவர்களாவோம் .


.

.


.


.


8 comments:

சம்பத் said...

ஒவ்வொன்னும் சாட்டையடிங்க...நல்லா சொன்னீங்க...

cheena (சீனா) said...

நல்ல கவிதை நல்ல சிந்தனை

செயல்படுத்தலாமே

நல்வாழ்த்துகள்

காந்தி காங்கிரஸ் said...

நன்றி ,
சம்பத்
மற்றும்
சீனா

வேலன். said...

அரசாங்கம் சட்டத்தை கடுமையாக்கினால் சரி....
வாழ்க வளமுடன்,
வேலன்.

காந்தி காங்கிரஸ் said...

நன்றி
வேலன்
நன்றி

வால்பையன் said...

கொடுமையான விசயம் தான் தல!

காந்தி காங்கிரஸ் said...

ஆம்
உண்மை தான்

வால் பையன்
அவர்களே
தங்களின் வருகைக்கும் ,
பின்னுட்டத்திற்கும்
நன்றி .

kadambavanam said...

we learn how the school buildings should be constructed from the kumbokonam school incident.Now we learn what are the rules & conditions to be framed while the childrens are in bus.Thats O.K. The question is at the cost of what? The present position of high officials are not mainly on public interest,and public welfare.

Post a Comment

Blog Widget by LinkWithin