Friday, February 5, 2010

மும்பை யாருக்கு சொந்தம் - அரசுக்கு ஒரு யோசனை .










அச்சம்
.....,அச்சம்..... ,அச்சம் ......
சுதந்திரத்தை சுதந்திரமாக சுவாசிக்கமுடியத மும்பைவாசிகளாக .இதனால் மக்கள் அடையும்
மனரீதியான பாதிப்புகள் கணக்கிலடங்கா.அதோடு மட்டுமல்லாமல் இதனால் நமது நாட்டிற்கு
ஏற்படும் பொருளாதார பின்னடைவை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.இது நமது நாடு
இங்கு உள்ள அனைத்தும் நாமனைவருக்கும் சொந்தம் .
நாமனைவரும் கட்சிசார்பின்றி ஒற்றுமையாக இருந்து பிரிவினை பேசுகின்றவர்களை
எதிர்த்தால்தான் நாம் நாமக்கு கிடைத்த சுதந்திரத்தை சுதந்திரமாக சுவாசிக்கமுடியும்
.எனவே,நாமனைவரும் சொந்தம் கொண்டாடும் கூட்டத்தினரின் செயல் தவறு என்று நமது கடுமையான
கண்டனத்தை பத்திரிக்கைகள் ,வலைகள் ,தொலைக்காட்சிகள் ,ப்ளாக்குகள்,குறுஞ்செய்திகள் ,கடிதங்கள்
வாயிலாக இந்தியாவிலுள்ள அனைத்துப்பகுதிகளிலிருந்தும் ;வெளிநாடு வாழ் இந்தியர்கள் உட்பட
அனைத்து இந்தியர்களும் இந்தியர்களாக ஒன்றுபட்டு தெரிவித்தால் இத்தகைய சிறுமதி கூட்டம்
தங்களின் வாலாட்டத்தை நிறுத்திக்கொள்ளும். இதைப்படிப்பவர்கள் அனைவரும் இதனைச்செய்வீர்கள் என
நம்புகின்றேன் .

நானும் எனது கடுமையான கண்டனத்தை இதன் முலம் தெரிவித்துக்கொள்கின்றேன் .

அதோடு அரசுக்கும் ஒரு யோசனையை இதன்முலம் முன்வைக்கின்றேன். இது போன்ற பிரச்சனைகள்
எதிர்காலத்தில் மீண்டும் ஏற்படாமல் இருக்க மக்கள்தொகையை 50 லட்சத்தைத்தாண்டிய அனைத்து
பெருநகரங்களையும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குட்பட்ட தனி மாநிலமாக
ஆக்கிவிட்டால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாகவும் இருக்கும் மக்களும்
அச்சமின்றி சுதந்திரமாக வாழ்வர் .


.

.

.


Blog Widget by LinkWithin