மரியாதைக்கும் உரிய
அப்துல்கலாம் அய்யா அவர்களுக்கு ,
ஈரோட்டிலிருத்து
காந்தி வணக்கத்துடன் எழுதுவது .
அய்யா எனக்கு
புத்தர் ,காந்தி ,மார்க்சு,பெரியார்ன
ரொம்ப உசிருங்க .
உண்மையை உலகிற்கு உணர்த்த
இந்த ப்ளாக்கை ஆரம்பிச்சேனுங்க
இதற்கு
எனது ஆசான்களில் ஒருவரான மாமனிதர் மோகன்தாசின் பெயரில்
எனக்கு வைத்துக்கொண்ட புனைப்பெயர் தாங்க இது
காந்தி .
அய்யா நேற்று (11.08.09 )எங்க ஊருக்கு வந்திருந்தீங்க .
ரொம்ப மகிழ்ச்சிங்க .
அய்யா எங்க ஊருக்கு நீங்க வருவது
இது தானுங்க முதல் தடவைனு நினைக்கின்றேன் .
அதனால எங்க ஊரைப்பத்தி உங்ககிட்ட
ஒரு விசயம் உங்ககிட்ட முதலில் கூற ஆசைப்படுரேங்க .
நாங்கள்ளாம்
( நாமெல்லாம் என்று தானுங்க சொல்லனும் ,
நீங்க உயர்வான இடத்தில இருக்கரதால நாங்கனே
செல்றேன் ,
கோவித்துக்கொள்ளாதீங்க ).
நாங்கள்ளாம்
ரொம்ப பாமரர்களுங்க .
ஆமாங்க ,
எங்காளுங்க உயர்ந்த இடத்திலிருந்து
எதைச்சென்னாலும் உடனே கற்பூரம் மாதிரி கப்புனு புடுச்சிக்குவோம்.
அப்படித்தானுங்க
எங்கமேல மலரிதழ்களை தூவுவதாக
கூறி காலம் காலமா
சாதி ,மதம் ,
மூடப்பழக்க வழக்கங்கள் ,அடிமைத்தனம் இப்படி எண்ணிலடங்கா
குப்பைகளை தூவி
முடியிருந்தனர் உயர்ந்தோர் .
அப்பத்தானுங்க
கலகக்காரர் ஒருத்தர் பிறந்தாருங்க .
அதுவும் பாருங்க 98 வயது வரை
ஒரு கையில் மூத்திரச்சட்டியைத் தூக்கிக்கிட்டு
எங்களுக்கு எங்களின் நிலையை
விளக்கியதோடு ,
எங்களின் அறியாமையை அகற்றவும் ,
அடிமைத்தனம் நீக்கவும் ,
அயராது பாடுபட்டு .
மனிதனை மனிதனாக நினைக்கும்
பக்குவத்தை
விதைத்து ,
குப்பைகளிலிருந்து எங்களை
மீட்டாருங்க .
அவரின் பேச்சால்,எழுத்தால் ,வாழ்வால்.
அவர்தானுங்க பெரியாருங்க .
அவர் பிறந்த ஊரு தாங்க இது .
இங்கு அவர் பிறந்த கட்டில் கூட
இன்னும் இருக்குங்க .
அவர்பயன்படுத்திய பொருட்கள் அத்தனையும் இருக்குங்க இங்கிருக்கும்
அவரின் நினைவகத்தில் .
ஆனால் அய்யா ,இந்த மூடப்பழக்கவழக்கத்தை
அதானுங்க சாமி கும்பிடுரது போன்ற
பழக்கத்தை ஓழிக்கரத்துக்கு
அவர் படாத பாடு பட்டிருக்காருங்க .
இருந்தாலும் இன்னும் பலபேர் அப்படியே
தாங்க அறியாமையிலே இருக்காங்க .
உங்களுக்கு யாரும் சொல்லவில்லையா
இவரைப்பற்றி.
ஏன் கோட்கிறேன் என்றால்
மொதமொத எங்க ஊருக்கு வந்திருக்கீங்க
இவரைபற்றி பேசுவிங்கனு
நினைத்தேன் .
நீங்க பேசவே இல்லையே
அதனால் தான் .
அவ்வளவு தாங்க .
அப்புறம் அய்யா ,
தாங்கள் இங்கு கூடியிருந்தவர்களிடம் உறுதிமொழி ஒன்று எடுத்துக்கச்சொன்னீர்கள் .
''என்னுடைய வீட்டில் பூஜை அறைக்கு அருகில் அல்லது பிரார்த்தனை அறைக்கு அருகில் 20 நல்ல
புத்தகங்கள் கொண்டு ஒரு சிறு வீட்டு நூலகத்தை ஆரம்பிப்பேன் '' என்று
அது தாங்க
இந்த கடிதத்திற்கு காரணமுங்க .
அய்யா,
உங்களை
வழிகாட்டியாகவும் ,
ஆசானாகவும் ,
வாழ்வில் முன்னேடியாகவும் ,
முதன்மையானவராகவும்
எண்ணற்ற குழந்தைகளும் ,
இளைஞர்களும் எடுத்துக்கொண்டு
நீங்கள் கூறும் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றார்கள் .
நிறைய படித்த பண்பாளர்கள் பலரும் இதில் அடக்கங்க.
அவர்கள் எல்லாம் நேற்றே வீட்டு நூலகம் ஆரம்பித்திருப்பர் .
இதில் சிக்கல் என்னவென்றால் வீட்டு நூலகம் தோறும் அருகில் கட்டயம் பூஜை அறை அல்லது
பிரார்த்தனை அறை இருக்கவேண்டும் என்பது தாங்க .
நடுத்தர பாமர மக்கள் வாழும் வீடுகளில் பெரும்பாலும் பூஜை அறை அல்லது பிரார்த்தனை
அறை என்பது வீட்டுல இருக்க ஏதே ஒரு அலமாறியில மேல் ரோக்கு தாங்க .
அதுவும் 10க்கு 10 ரூமில.
நீங்க சென்னதால மேல் ரோக்கு ஒரமா வீட்டு நூலகத்தை ஆரம்பிக உத்தேசங்க .
வீட்டுக்கு வரவங்க பேரவங்ககிட்ட புத்தக திருவிழா போயிருந்தேன் அப்துல்கலாம் அய்யா
அவர்கள் வந்திருந்தார் புள்ளக முன்னேற்றத்திற்கு வீட்டு நூலகத்தை ஆரம்பிக சென்னார்
ஆரம்பிச்சிட்டேன் அவரு புத்தகமும் இருக்கு பார் நீங்களும் ஆரம்பிக்க வேண்டியது தானே
என்ற விமரிசனத்துடன் .
அதனால் பலரிடமும் இந்த பழக்கம் தொடர .
மார்க்சு ,பெரியார் புத்தகங்கள் சாமி படத்துக்கு பக்கத்துல வச்சா ஒன்னு சாமி
கோவித்துக்கொள்ளும் அல்லது வரவங்க பேரவங்ககிட்ட ஏயா அறிவிருக்கா ,சாமி கிட்டப்போய்
மார்க்சு , பெரியார் என விமரிசனத்துக்கு ஆளாக வேண்டிவரும் என்பதால் பகுத்தறிவு
மற்றும் பொது உடைமைச்சித்தாந்தங்கள் கூறும் புத்தகங்கள் வாங்கவதே முதலில் கட் .
சாமியை மகிழ்விக்க தேவாரம் ,திருவாசகம் ,
பகவத் கீதை ,பைபில் ,குரான்
இப்படி சாமி சம்பந்தமான புத்தகங்கள் ஆஜர் .
அவரவர் கோட்பாட்டிற்கு ஏற்ப .
பர்சேசும் அப்படியே .
தினமும் , ஒரு மணி நேரம் நூலகம, பஜனை மடமாக ,மல்டி பர்பஸ்
சாமிக்கு சாமி குப்பிட்டமாதிரியும் ஆச்சு நூலகத்துல படிச்ச மாதிரியும் ஆச்சு .
அவசர உலகந்தானுங்க எங்க டயம் கிடைக்குதுங்க .
இப்படித்தானுங்க
அய்யா நீங்கள் வாங்கிய உறுதிமொழிப்படியான நூலகங்கள் அமையப்போகின்றன,
வீட்டில் பூஜை அறைக்கு அருகில் அல்லது பிரார்த்தனை அறைக்கு அருகில் அமைத்தால் .
அய்யா ,
உங்களின் நோக்கம் மிகவும் உயர்வானது தான் .
ஆனால் ,
அதனை அடைய தாங்கள் கூறிய பாதை தான் மிகமிகத் தவறானதாக உள்ளதாக உணர்ரேங்க .
உலகில்
எந்த ஒரு சிறந்த விசயமாகட்டும் ,
போராட்டமாகட்டும்
உயர்ந்த லட்சியத்தாற்காகத்தான் ஆரம்பிக்கப்படுகிறது .
ஆனால்,
அதனை அவை அடைவதற்கு மேற்கொள்ளும் பாதைத்தவற்றினால் படுமோசமாக
மனித குலத்தை கொண்டுசென்றுவிடுகிறது
என்பது எனது கருத்துங்க .
இதை நாம் உலகினில் பார்த்து தானே வருகின்றேம் .
அய்யா ,
விண்வெளி ராக்கெட்டு விஞ்ஞானியான உங்களுக்கு மனிதனை மனிதனாக்கும் அந்த
மனிதர்களின் கருத்துக்களில் உடன்பாடில்லாமல் இருக்கலாம் . ஆனால் ,
இப்பொழுது தான் கண் முழித்துவரும் எங்க பாமர சமுதாயத்தை மீண்டும் படுபாதகமதகுழிக்குள்
தள்ளும் இது போன்ற உறுதிமொழிகளை இனி வாங்க வேண்டாமுங்க .
நாங்கொல்லாம் இரணத்துடன் நொந்து நூலாகி ஏதே மேல இப்பத்தான் வந்துக்கிட்டு இருக்கோமுங்க .
உங்களைப்போன்றவர்களே இப்படிப்செய்தால் மனித குல மேன்மைக்காக பாடு பட்ட
மார்க்சு , பெரியார் போன்றவர்களின் பாடெல்லாம் என்னாவது அய்யா.
தயவுசெய்து
நான் செல்லறதுல தப்பிருந்தா தப்புனு செல்லுங்க அய்யா .
திருத்திக்கிறேன் .
தப்பு என தெரிந்தும் திருத்திக்கொள்ளாதவன் உறைந்து விடுவான் ,பின் உடைந்து விடுவான்
என்பது எனது கருத்துங்க .
மற்றபடி ஒன்றுமில்லைங்க அவ்வளவு தாங்க அய்யா .
என
அன்புடன்
காந்தி .
.
.
.
.